மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இந்நிலையில் காணிக்கையாக 60 லட்சத்து 74 ஆயிரத்து 429 ரூபாய் பணம், 302 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி, ஆகியவை உண்டியலில் இருந்துள்ளது. இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி, கோவில் ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவல தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்துள்ளனர்.