Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. எரிந்து நாசமான வாகனங்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள முத்தம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நோக்கி சென்றுள்ளார். இவருடன் தமிழரசன் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மொபட் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தேவராஜ் மற்றும் மொபட்டில் வந்த சிவப்பா ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 வாகனங்களும் கருகி சேதமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |