Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கணவர், குழந்தைகள் யாரும் இல்லை” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவர் மற்றும் குழந்தைகளை இழந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த், ஹரி பிரீத்தா என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு குளத்தில் தவறி விழுந்து இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. இதனால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு லோகேஷ்வரனும் தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வாழ்க்கையை வெறுத்த மீனாட்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |