Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயில்களில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல பொது பெட்டிகளை இணைக்கலாம். அதில் முன் பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தற்போது இயக்கப்பட்டு வரும் விடுமுறைக்கால சிறப்பு ரயில்களிலும் தேவைக்கு ஏற்றவாறு இதே போன்று பொது பெட்டிகளை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறையில் இந்த அறிவிப்பு தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, உதாரணமாக ஒரு ரயிலில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 4 முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் இருந்ததால், அவை தற்போது 2S முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்படுகின்றன.

இப்பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளில் இருந்து முன்பதிவு இல்லா பெட்டிகளாக மாற்றப்படும். மேலும் கொரானாவுக்கு முந்தைய காலத்தில் இருந்த முன்பதிவு பெட்டிகளும், அதே எண்ணிக்கையில் தொடரும். இவை தற்போது இயங்கும் ரயில்களுக்கும் பொருந்தும். மேலும் விடுமுறைக்கால சிறப்பு ரயில்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |