Categories
மாநில செய்திகள்

மேலும் ஒரு அமைச்சர் மீது வழக்குப் பதிவு…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூ. 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கைதை தொடர்ந்து சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |