இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கொத்தனாரான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மகாராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் கட்ராம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயராமனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த மகாராஜன் மற்றும் ஆதி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆதி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.