காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகில் குற்றியாறு பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(29) இவர் மனைவி நிஷா. இவர் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நிஷா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்பும் நிஷா தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் மன வருத்தத்திற்கு ஆளான கோபாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பேச்சிப்பாறை காவல் துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த போலீஸ் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.