உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடு வழியாக வெளியேற்றுவதற்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு அரசாங்க செலவில் பல்முனை ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால் போலாந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் குறிப்பிட்ட எல்லைகளை கடக்கும் நடவடிக்கைகளும் அடையாளம் காணப்பட்டது.
மேலும் வெளியுறவுத்துறை குழுக்கல் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் உதவ அனுப்பியுள்ளது. இதற்கிடையில் இந்த திட்டத்தை உருவாகும் முன் கீவ்வில் உள்ள எங்கள் அமைச்சகம் மற்றும் எங்கள் தூதரகம் பல அறிவுரைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளை ஏற்று போருக்கு முன்னர் 4000 இந்தியர்களை வெளியேற்றி இருந்தனர். மேலும் உக்ரைனில் இன்னும் 15 ஆயிரம் இந்தியர்கள் எஞ்சிருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். இதனைத் தொடர்ந்து ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு எல்லை கடக்கும் பாதை செயல்படுகிறது. ஆனாலும் அந்த இடத்தில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டினர் தப்பிக்க முயற்சிப்பதால் போலந்தில் இருந்து வெளியேற இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லைகளுக்குள் அருகில் இருப்பவர்கள் தங்கள் வெளியேறும்இடம் நோக்கி அனுப்பிவைக்கப் படுகின்றனர்.
இந்நிலையில் இந்தியர்கள் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் ஆயிரம் பேர் ரோமானி மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் உக்ரேனில் இருந்து தரை வழிகள் வழியாக உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் நான் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு துயரங்களையும் தனித்தனியாக அழைத்து இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் மற்றும் இந்திய குடி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளேன். இதனால் இரு தூதரகமும் எங்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு உறுதி அளித்துள்ளனர்” என்று வெளியுறவு ஹர்ஷ் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.