Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி அன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை அலுவலகங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

பொது தேர்வு எழுதும் மாணவர்கள், பொது தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இதற்கு பதிலாக மார்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |