Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ரோட்டில் நின்ற  2 பேரை  சரமாரியாக வெட்டிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஞ்சள்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கரந்தமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ராமமூர்த்தியுடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள  மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சில  மர்ம நபர்கள்  கரந்தமலை மற்றும் ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும்  மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்து இரண்டு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |