கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக நாடு முழுவதிலும் சர்வதேச விமான சேவைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக மதுரையிலிருந்து, சிங்கப்பூருக்கு நேரடியான விமானசேவை இருந்த வந்தது. இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் வாரத்துக்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து (அங்குள்ள நேரம்படி) மாலை 5:00 மணியளவில் புறப்படக்கூடிய விமானமானது, மாலை 6:40 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும். பின் விமானம் மதுரையிலிருந்து இரவு 9:35 புறப்பட்டு, சிங்கப்பூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை டூ சிங்கப்பூர் விமான சேவைக்கான முன்பதிவு நேற்று (பிப்..26) முதல் தொடங்கியுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.