Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து வந்த சென்னை மாணவர்கள்…. வரவேற்ற அமைச்சர்….!!!!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அருகிலுள்ள நாடுகள் வழியாக ஏர் இந்தியா விமானம் மூலமாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய 5 மாணவர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்து உள்ளனர் . அப்போது மாநில அமைச்சர் மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார்.

இவ்வாறு தமிழகம் திரும்பிய 5 பேரும் மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்டு இதுவரையிலும் 3 விமானங்கள் நாடு திரும்பியுள்ளது. இதில் முதலாவது விமானத்தில் 219 நபர்கள் நேற்று வந்தனர். அதன்பின் 2-வது விமானத்தில் 250 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை(இன்று) அதிகாலையில் வந்தனர். அதனை தொடந்து 3-வது விமானத்தில் மொத்தம் 240 நபர்கள் பிப்..27 (இன்று) காலை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |