சென்னையில் மவுண்ட், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிக்காக தற்போது போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று (27.2.2022) இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்ட முறையும் அதன்பின் மேற்படி போக்குவரத்து 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை போக்குவரத்தில் இலகுரக வாகனங்கள் செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போரூரில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமனன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கடந்து சாலையில் வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட், பைபாஸ் சந்திப்பு, பூந்தமல்லி, நெடுஞ்சாலை வானகரம், வேலப்பன்சாவடி, மருத்துவ கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடது புறம் திரும்பி குமரன் சாவடி சந்திப்பு வழியாகவே அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவிதா மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி ,வழியாக மதுரை பைபாஸ் சாலை, செஞ்சு சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி பொருள் நோக்கி செல்லவே அனுமதிக்கப்படும். இந்த பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை ஆவடி போக்குவரத்து காவல்துறை ஆணையர் இணையதள முகவரிகள்[email protected] மற்றும் கட்டுமான பணி அதிகாரி இணையதள முகவரிக்கு[email protected] அனுப்பலாம். மேலும் பொதுமக்கள் ஆலோசனை ஆவடி ஆணையத்துக்கு ட்விட்டர் மற்றும் காவல் ஆணையர் செல்போன் எண் 8056217958 ஆகியவற்றையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.