தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது காட்பாடி நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.