Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வயிற்று வலி தாங்க முடியல” இளைஞரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலி  தாங்க முடியாமல் இளைஞர் தூக்கிட்டு  தற்கொலை  செய்து  கொண்ட  சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை  மாவட்டத்தில்   உள்ள அறந்தாங்கி  அருகே  மூக்கணாங்குடியிருப்பில்   வசித்து  வந்தவர்  பாண்டிதுரை (வயது 29).  கடந்த  24 ஆம்  தேதியன்று  இரவு  நேரத்தில்  திடீரென இவருக்கு  வயிற்று வலி  ஏற்பட்டதால்    அதனை  தாங்க முடியமால்  தவித்து  வந்துள்ளார்.  வீட்டில்   யாரிடமும்  சொல்லமால்   வலியில்  தவித்த  பாண்டிதுரை  ஒரு கட்டத்தில்  தூக்கிட்டு  தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.

இது  குறித்து  தகவலறிந்து   சம்பவ   இடத்திற்கு  வந்த   காவல்துறையினர்  பாண்டிதுரையின்  உடலை  பிரேத பரிசோதனைக்காக  அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம்  குறித்து  வழக்குப்பதிந்து  விசாரணை  நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |