உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யா கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடுகளை சந்தித்துள்ளனர்.
22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளால் ரஷ்யா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள், நிதி நிறுவனங்களின் மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது.ரஷ்ய பங்குச்சந்தையான மாஸ்கோ எஸ்சேன்ஜ் ஒட்டு மொத்தமாக 33 % அளவில் வீழ்ச்சி அடைந்து பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7% வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.