Categories
உலக செய்திகள்

“அமைதியா போங்க”…. ரஷ்யா-உக்ரைன் தீர்வு காண…. அழைப்பு விடுத்த தலீபான்கள்….!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “வன்முறையை தீவிரப்படுத்த கூடிய நிலைப்பாடுகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் நெருக்கடியை தீர்க்க இரு தரப்பையும் அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |