மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 10,000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி கிடையாது. மேலும் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்க இந்த அட்வான்ஸ் தொகை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சந்தையில் நுகர்வோர் செலவினத்தை தூண்டுவதற்கும் இந்த அட்வான்ஸ் தொகை உதவும் என்று கூறப்படுகிறது.இதற்கு முன் ஏற்கெனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-ஆம் ஆண்டு பண்டிகை கால அட்வான்ஸ் தொகையை அறிவித்திருந்தார்.
அப்போது அரசு ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான பண்டிகைக்கு 10000 ரூபாய் அட்வான்ஸ் பெற்று கொள்ளலாம் என்பதே ஆகும். இதே திட்டத்தை மீண்டும் அறிவிக்க அரசு பரிசீலித்து வருகின்றது. இதன்படி மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அட்வான்ஸ் பற்றி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கிடையாது என்பதால் அட்வான்ஸ் தொகையை அதிகபட்சம் 10 தவணைகளில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.