வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரப்பாடி கிராமத்து சுதாகர்-தங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து சுதாகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மூலம் சுதாகர் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர். மேலும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.