Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரியின் பின்புறம் மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரியின் பின்பக்கம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்திலுள்ள நிம்பாவாஸ் கிராமத்தில் மகிபால்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அச்சரப்பாக்கம் சாலையில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே மாவட்டத்திலுள்ள தேபாவாஸ் கிராமத்தில் சேட்டாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீத்தாராமநாயுடு பகுதியில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வசூல் செய்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிக்குள்புடி கிராமத்தில் வசிக்கும் லாரி டிரைவரான விஜி என்பவர் லாரியில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் விஜி டீசல் இல்லாததால் வந்தவாசி-தெள்ளார்  சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டீசல் வாங்க சென்றிருந்தார். அப்போது மகிபால்சிங் மற்றும் சேட்டாராம் வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின் பக்கம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |