Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பிடிபட்டார் எனவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருந்து முன்கூட்டியே ஜாமீன் எடுத்திருந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை இந்த சூதாட்டம் பற்றி விசாரிக்கப்பட்டு திங்களன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

விசாரணை வெளிவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவிய அவரது மாமா மீது தமிழகத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஹரியானாவில் உள்ள சோனிபத்தை பூர்வீகமாகக் கொண்ட சைட், சி.சி.பி யால் முன்னர் கைது செய்யப்பட்ட மற்றொரு சூதாட்ட மோசடியாளரான சயாமின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

போட்டிகளை சரிசெய்தல் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பந்தய மோசடிகளை நடத்துவதில் இவர்கள் இருவரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சயாமைப் போலவே, செய்தும் பல வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அணி உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தார்.

Categories

Tech |