Categories
விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் உறுதி ….!!!

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப்பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான இந்தியாவின் நிஹாத் ஜரீன்,இங்கிலாந்தை சேர்ந்த சார்லி டேவிசியனை எதிர்த்து மோதினார்.இதில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிஹாத் ஜரீன் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவில் நடந்த  காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நித்து, இத்தாலியை சேர்ந்த ராபர்டா போனாட்டியை எதிர்த்து மோதினார். இதில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது .இதற்கு முன்பு இந்திய வீராங்கனை நந்தினிமுதல் பதக்கத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |