தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குதூர் போலீஸ் நிலையத்தில் கூட்டு பாலியல் செய்யப்பட்ட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்னின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் இரவு தங்குவதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அதே தோழியை மீண்டும் சந்திக்க சென்ற போது மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை அந்த பெண் 8 மணியளவில் விஷம் குடித்துள்ளார். உடனே அவரது சகோதரர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 22-ஆம் தேதி உயிரிழந்துள்ளார் இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததால் தான் அவர் விஷம் குடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் குற்றம்சாட்ட மூவரை கைது செய்துள்ளனர். மேலும் அதில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள் மற்றொருவர் மண்டல் பரிஷத் பிராந்திய தொகுதி உறுப்பினரின் கணவர் என போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஒருவரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.