Categories
உலக செய்திகள்

#BREAKING: “பொழியும் குண்டுமழை”…. உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் ரஷ்யா தாக்குதல் காரணமாக மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். தற்போது பல்வேறு எல்லைகளில் இருந்து குண்டு மழை பொழிவதால் உக்ரைன் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்..

Categories

Tech |