சட்டவிரோதமாக மணல் கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரு கீழத்தெரு அரங்குளமஞ்சு பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மணல் கடத்த முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றியது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மணல் கடத்த முயன்ற குற்றத்திற்காக சதீஷ்குமார், முருகானந்தம் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.