பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் மற்றும் நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதில் உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக கைது செய்யப்பட்ட மத்திய மந்திரியின் மகன் அஜித் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்தும், அவரை மத்திய மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.