உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள பொம்மம்பட்டி வடக்கு தெருவில் ரங்கசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு காலில் அடிபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது மகன் உடனடியாக ரங்கசாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.