தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் 15-வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சி 53-வது வார்டு திமுக வேட்பாளர் வேளாங்கண்ணி வெற்றி பெற்றுள்ளார். ஓசூர் மாநகராட்சியில் திமுக 20, அதிமுக 13, சுயேச்சை 4, பாஜக, காங்கிரஸ் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.