வெங்கட் பிரபுவின் வீட்டை தேடி தயாரிப்பாளர்கள் பலர் குவிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சமீபத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் நல்ல சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாற ஆரம்பித்துள்ளார் என்று கூறலாம்.
அதன்படி, இவரின் வீட்டை தேடி தயாரிப்பாளர்கள் பலர் குவிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இவரின் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.