Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது.

காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |