அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது.
இதனை தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனின் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷியா முன்மொழிவதாகவும், பேச்சு வார்த்தை தடத்துவதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு அதிபர் மாளிகையில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்னும் காலம் கடந்து போகவில்லை, அதிபர் புதின் ரஷ்ய போரை தவிர்த்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. “வெளியுறவு மந்திரி மற்றும் செயலாளர் ஆகியோர் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ளதாகவும் அங்கு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும்” தெரிவித்தனர்.
ஆனால், இந்த சந்திப்பு நிகழ வேண்டுமானால் ரஷ்யா உக்ரைன் மீதான போரைத் தவிர்க்க ஒப்புக்கொள்ள வேண்டும். இதனை தவிர்த்து ரஷ்யா போரை தொடங்கினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது விரைவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புதினுடன் ஒரே நாளில் இரண்டு முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அமெரிக்க அதிபர் பிரான்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் தான் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழ உள்ளது. இந்நிலையில் இந்திய தூதரக அமைப்பு உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் மாணவர்கள், குடிமக்கள் அனைவரையும் நாடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது