Categories
மாநில செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது..

Categories

Tech |