திருப்பதி கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ 50,000 லிருந்து ரூ 100000மாகவும். கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம்ரூ 1,000லிருந்து ரூ 2,500 ஆகவும் அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.