Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வாலிபர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் திருப்புல்லாணி அடுத்துள்ள மொட்டையன் வலசை பகுதியின் பாக்கியம் என்ற முதியவர் வசித்து வருகிறார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ரெகுநாதபுரம அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி பாக்கியம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புல்லாணி காவல்துறையினர் பாக்கியத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பஞ்சந்தாங்கி சேர்ந்த ரஞ்சித்குமார்(21) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |