வாலிபரை கொலை செய்து மேம்பாலத்தின் அடியில் தூக்கி வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நான்கு வழி சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 தனிப்படைகளை அமைத்து வாலிபரை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.