கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் நாள் ஏலம் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்றுள்ளது. அப்போது சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்குமிடையே எப்படியாவது இந்திய அணியின் கேப்டன் தோனியை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையான போட்டி நிலவியுள்ளது.
ஆனால் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இதனையடுத்து 12 ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி சுமார் 6 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.