Categories
தேசிய செய்திகள்

ஆதார் & மொபைல் எண் மட்டும் போதும்…. 8 லட்சம் வரை கடன்…. வங்கி சூப்பர் நியூஸ்…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆதார் மற்றும் மொபைல் எண்ணை வைத்து 8 லட்சம் வரையில் கடன் வழங்கும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் சிறப்பு வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி புதிதாக கொண்டு வந்துள்ளது. அதன்படி அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் சலுகை என்ற ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வங்கியில் வாடிக்கையாளராக நீங்களும் இருந்தால், உங்களுக்கு அவசர காலத்தில் பணம் தேவைப்பட்டால், இனி கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் இந்த வசதியின் கீழ் கடன் வாங்க, நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். உங்களுக்கு கடன் உடனடியாக கிடைக்கும். மேலும் அனைவருக்கும் இந்த சலுகை பொருந்தாது எனக் கூறியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மத்திய அல்லது மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் சில நிமிடங்களே இந்த கடன் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது இச்சலுகை வாரத்தின் ஏழு நாட்களும் கிடைக்கும்.

இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதற்கு எந்தவித செயல்பாட்டு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்கு மற்றும் மற்ற கடன்களை அடைக்கவும் தனிநபர் கடன்களை அதிகமாக வாங்க தொடங்கியுள்ளன.இதனால் ஆன்லைன் மூலமாக இவை அதிவிரைவாக கிடைப்பதால், இந்த இன்ஸ்டா லோன் எனப்படும் உடனடி கடன் வசதி வாடிக்கையாளர்கள் இடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

Categories

Tech |