Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்சிக்கு சென்றவருகுக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஊழியர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியசீலன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியின் பங்கேற்றுவிட்டு கந்தம்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெருமாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறு சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தார்.

இந்த கோர விபத்தில் சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் சத்தியசீலன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |