தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வருகின்ற 21 & 22 தேதிகளில் M.E., M.Tech., M.Arch., M.Plan., & Ph.D., மாணவர்களுக்கு நடைபெற இருந்த நேரடி செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வுக் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கும், 21-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.