சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வான வீரர்களை வைத்து அனைத்து அணிகளும் வியூகங்கள் XI அணியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் துணை பயிற்சியாளரான சைமன் கடிச் அறிவித்தது திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் வரும் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டு அதற்கான தொகையை நாங்கள் ஒதுக்கி வைத்து இருந்தோம்.
ஆனால் அணி நிர்வாகம் அதனை ஓரளவுக்கு கூட செயல்படுத்தாமல் தங்கள் இஷ்டத்திற்கு வீரர்களை தேர்வு செய்துவிட்டனர். இப்படிப்பட்ட ஒரு அணியுடன் இனியும் பயணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஆஸி பயிற்சியாளர்கள் ப்ராட் ஹெட்டின், ட்ரேவர் பெய்லிஸ் ஆகியோரும் முன்னாள் வீரர் ஆவார். இப்படி ஆஸ்திரேலிய அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ஒத்துப் போகாமல் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் ட்ரோல் செய்துவருகின்றன. ஹைதராபாத் அணி சார்பாக அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவியா மாறன் தான் ஏலம் கேட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.