சிறுமிக்கு தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.