Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் பழங்காநத்தம் நேதாஜி நகரில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |