மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் ரயில் நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு வழித்தடத்தில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற இரண்டு வழித்தடத்தில் விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன . பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சிலர் நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் 620 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு வழிப் பாதைகள் அமைக்கும் பணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரெயில்வே மேம்பாலம் 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரெயில் பாதைகளை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கிறார். இந்த விழா மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறவிருக்கிறது.