Categories
தேசிய செய்திகள்

OMG: 61 பேர்…. சிகிச்சைக்கு போன சிறுமி…. 6 மாதம் நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி…!!!

சிகிச்சைக்கு வந்த சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை  சேர்ந்த தாய், மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியின் தாயார் இறந்து விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி மட்டும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அங்கு பணிபுரியும் ஸ்வர்ண குமாரி என்பவர் அந்த சிறுமியின் தந்தையிடம் உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ள  தொற்று நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என தெரிவித்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை அதை  நம்பி அந்த சிறுமியை அவரிடம் ஒப்படைத்து உள்ளார். அதன்பின்னர் ஸ்வர்ண குமாரி அந்த சிறுமியை விஜயவாடா ,காக்கிநாடா நெல்லூர், ஐதராபாத் போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

பின்னர் அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சிறுமி குண்டூரில் உள்ள தனது தந்தைக்கு சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து குண்டூர்  போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை ஆறு மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை  கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தெலுங்கானாவை சேர்ந்த 61 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |