Categories
மாநில செய்திகள்

“மூன்றாம் பாலினத்தவர்”…. விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீங்க!…. அமலுக்கு வந்த புதிய சட்டம்….!!!!

காவல்துறையினர் மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுப்பதற்காக புதிய நடத்தை விதிகள் தமிழக காவல்துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நடத்தை விதி 24 சி என்ற பிரிவு தமிழக காவல்துறையில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதியின் கீழ் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் திருநங்கைகளை விசாரணை மேற்கொள்ளலாம்.

அதேபோல் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் காவல்துறையினரிடம் செல்போன் காணவில்லை என்று புகார் அளித்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் காவல்துறை அதிகாரி விசாரணை என்ற பெயரில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது திருநங்கைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |