Categories
தேசிய செய்திகள்

ஜூலை-1 முதல்…. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில்  எந்தெந்த பொருளுக்கு தடை என்ற பட்டியலை மத்திய அரசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மாகோல் ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், பத்திரிகைகள், சிகரெட் அட்டைகளுக்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை 30-ஆம் தேதிக்குள் வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் உபயோகம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |