நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார். இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா காலையில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் உடனே அருகில் இருந்த மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர். ஆனால் அனுசியா முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.