Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதுதான் ரொம்ப முக்கியம்” தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம்  291 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக 406 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள  ஊட்டி  பிரிக்ஸ் பள்ளிக்கு முக கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் போன்ற 15 மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் இருந்து தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

Categories

Tech |