Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டாஸ்மாக் ஊழியருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 91 ஆயிரத்து  560 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லல்கோட்டை பகுதியில் தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் சரவணகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் டாஸ்மார்க் ஊழியருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |