Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விவேகானந்தபுரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி(22) ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள ரஞ்சனி தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று காலையில் ரஞ்சனி இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிடாவெட்டி ஊரணி அருகே சென்ற பொது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ரஞ்சனி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ரஞ்சினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரசு பேருந்து டிரைவரான புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |